Type Here to Get Search Results !

தேனியில் புத்தகத்திருவிழா நடத்துவது குறித்து ஆலோசனை கூட்டம்

தேனியில் புத்தகத்திருவிழா நடத்துவது குறித்து ஆலோசனை கூட்டம்



புத்தகத் திருவிழா 2024 நடத்துவது தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர்  தலைமையில் நடைபெற்றது



தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், புத்தகத் திருவிழா 2024 கொண்டாடுவது தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்துத்துறை  அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர்  ஆர்.வி.ஷஜீவனா,  தலைமையில் இன்று (26.02.2024) நடைபெற்றது.


இக்கூட்டத்தில், இரண்டாவது ஆண்டாக நடைபெறும் புத்தகத் திருவிழா பழனிசெட்டிபட்டியில் உள்ள மேனகா மில் மைதானத்தில் 03.03.2024 முதல் 10.03.2024 வரை 8 நாட்கள் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கு தேவையான அனைத்து பணிகளையும் அலுவலர்கள் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும்.    

விழா மேடை அமைத்தல், விழா நடைபெறும் மைதானத்தை தயார்படுத்துதல், அரங்குகள் அமைத்தல், சிறப்பு பேச்சாளர்களை அழைத்தல், நாட்டுப்புற கிராமிய கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்தல், பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய சிறிய அளவிலான ராட்டினங்கள் அமைத்தல், போதிய அளவிலான காவலர்களை நியமித்து, பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ளுதல், பொதுமக்கள் மற்றும் அரங்குகள் பாதுகாப்பிற்கு தீயணைப்பு வாகனத்தை தயார் நிலையில் வைத்திருத்தல், தினசரி மருத்துவ முகாம் நடத்துதல், உள்ளிட்ட பணிகளை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் முறையாக மேற்கொண்டு புத்தக திருவிழாவை   மிகச்சிறப்பாக   நடத்திட  ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அலுவலர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார்.


மேலும், புத்தக திருவிழாவிற்கு வருகை தருகின்ற பொதுமக்களுக்கு தேவையான குடிநீர் வசதி, போக்குவரத்து வசதி, சுகாதார வசதி, உள்ளிட்டவைகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார்.


சிறப்பாக நடைபெற உள்ள புத்தகத் திருவிழாவிற்கு வாசிப்பை வசமாக்கும் நோக்கில் பொதுமக்கள் அனைவரும் வருகை தந்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கேட்டுக்கொண்டார். 


இக்கூட்டத்தில்,  மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ஜெயபாரதி,  மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி அபிதா ஹனீப், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா.நல்லதம்பி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் (கணக்குகள்) திரு.முகமது அலி ஜின்னா, திரு.பிரகாஷ் (வளர்ச்சி), வட்டார போக்குவரத்து அலுவலர் செல்வகுமார், மாவட்ட நூலக அலுவலர் (பொ) சரவணக்குமார் உள்ளிட்ட அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.



கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Top Post Ad

விளம்பரப் படம் - KST Store