Type Here to Get Search Results !

விநாயகர் வேடமணிந்து மனு அளித்த சிவசேனா கட்சியினர்

விநாயகர் வேடமணிந்து மனு அளித்த சிவசேனா கட்சியினர் 


தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிவசேனா கட்சி சார்பில் விநாயகர் வேடமணிந்தது  நூதன முறையில் மனு அளித்தனர். சிவசேனா கட்சியின் மாநில துணைத்தலைவர் குரு ஐயப்பன் தலைமையில் மனு அளிக்கப்பட்ட இந்த மனுவில்


வருகின்ற விநாயகர் சதுர்த்தி அன்று தேனி மாவட்டம் முழுவதும் சிவசேனா கட்சி சார்பில் 180 இடங்களில் விநாயகர் திருமேனிகள் வைத்து அன்றைய நாள் முழுவதும் பூஜைகள் செய்யப்படும் என்றும் ,அதனைத் தொடர்ந்து மூன்றாவது நாள் (9 9 2024 )அன்று மாலை 4 மணியளவில் 100 விநாயகர் திருமேணிகளுடன் தேனி அருகே  அல்லிநகரம் பகுதியில் பொம்மையாகவுண்டன்பட்டி சாலை பிள்ளையார் கோவில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு நேரு சிலை வழியாக அரண்மனைபுதூர் பகுதியில் உள்ள முல்லைப் பெரியாற்றில் விநாயகர் திருமேனிகளை கரைப்பதற்கு அனுமதி வழங்கவும்

இந்த நிகழ்ச்சிகளுக்கு ஒலிபெருக்கி வைப்பதற்கு அனுமதி வழங்குமாறு மனு அளித்தனர். இந்த நிகழ்வின் போது தேனி மாவட்டத்தை சேர்ந்த சிவசேனா கட்சியினர் உடன் இருந்தனர்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Top Post Ad

விளம்பரப் படம் - KST Store