Type Here to Get Search Results !

தேனி அருகே சிவலிங்கநாயக்கன்பட்டி கிராமத்தில் மாவட்ட ஆட்சியரின் மக்கள் தொடர்பு திட்ட முகாம் 14.02.2024 அன்று நடைபெற உள்ளது.

 தேனி அருகே சிவலிங்கநாயக்கன்பட்டியில்  மாவட்ட ஆட்சியரின் மக்கள் தொடர்பு திட்ட முகாம் 14.02.2024 அன்று நடைபெற உள்ளது.


தேனி மாவட்டம், தேனி வட்டம், கொடுவிலார்பட்டி வருவாய் கிராமம், உட்கடை நாகலாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட சிவலிங்கநாயக்கன்பட்டி கிராமத்தில்  வரும் 14.02.2024 ஆம் தேதி புதன் கிழமையன்று மாவட்ட ஆட்சியர் அவர்களின் தலைமையில்  மக்கள் தொடர்பு  திட்ட முகாம் நடைபெற உள்ளது.



தேனி வட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் தங்களது கோரிக்கை தொடர்பான மனுக்களை (பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகை கோருதல்,  புதிய குடும்ப அட்டை   கோருதல், ஆதி திராவிடர் நலத்துறை,  மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையிர் நலத்துறை, விபத்து நிவாரணம், விவசாயத்துறை, போக்குவத்துத்துறை மற்றும் இதர துறைகள்) 14.02.2024-ஆம் தேதியன்று நேரில் மனுவினைக் கொடுத்து  பயன்பெற்றுக் கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.வி.ஷஜீவனா, தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Top Post Ad

விளம்பரப் படம் - KST Store