சட்டம் சார் தன்னார்வலர் பதவிக்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் - முதன்மை மாவட்ட நீதிமன்ற நீதிபதி தகவல்
தேனி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு, பெரியகுளம், உத்தமபாளையம், போடிநாயக்கனூர், ஆண்டிபட்டி சட்டபணிகள் குழுக்களில் சட்ட உதவி மற்றும் சட்டவிழிப்புணர்வை பொதுமக்களுக்கு சேவை மனப்பான்மையுடன் வழங்க 50 சட்டம் சார் தன்னார்வலர் பணிக்கு பணியாளர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
சினிமா செய்திகளுக்கு
கே.ஆர் விஜயா படத்தில் ரஜினியை நடிக்க சிபாரிசு செய்த சிவாஜி
https://youtu.be/iCB2o0u9Ovs?si=EgmBJRCRMQcKOJB7
எம் ஜீ ஆருடன் கவுண்டமணி நடித்த படம்
https://youtu.be/WMbvoxfB10U?si=Cq7nKjVPDgIpC6Oj
விஜயகாந்த் - ராமராஜன் 13 முறை நேருக்கு நேராக மோதல்
https://youtu.be/lqRKPYMHuAw?si=3tvHOIsrx_yuRkci
தேனி மாவட்ட செய்தி தளத்தில் இணைய
https://chat.whatsapp.com/LXBEEZWpSrdJ0BBenX2BOt
விருப்பமுள்ளோர் https://districts.ecourts.gov.in/dlsa-theni என்ற இணையதளத்திற்கு சென்று விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து தங்களுடைய பெயர், முகவரி, கல்வித் தகுதி மற்றும் பணிபுரிய விரும்பும் இடம் போன்ற விரிவான விபரங்கள் அனைத்தையும் முழுமையாக பூர்த்தி செய்து, புகைப்படம் அடங்கிய, விண்ணப்பங்கள் மற்றும் தேவையான ஆவணங்களை இணைத்து, 27.05.2024 தேதி அன்று மாலை 05.00 மணிக்குள் தலைவர்/ முதன்மை மாவட்ட நீதிபதி, மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு, மாவட்ட நீதிமன்ற வளாகம், இலட்சுமிபுரம், தேனி மாவட்டம் என்ற முகவரிக்கு தபால் மூலம் மட்டுமே அனுப்பி வைக்க வேண்டும்.
27.05.2024 அன்று மாலை 05.00 மணிக்கு பின்னர் வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. மேலும் விபரங்களுக்கு மேற்குறிப்பிட்ட இணையதளத்தில் சென்று தெரிந்து கொள்ளலாம் என தலைவர் / முதன்மை மாவட்ட நீதிமன்ற நீதிபதி திருமதி.மு.அறிவொளி, எம்.ஏ.எம்.எல்., அவர்கள் தெரிவித்துள்ளார்.

