பூதிப்புரம் பேரூராட்சி துணைச்சேர்மன் இல்லத்திற்கு முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் வருகை – பல்வேறு கட்சி நிர்வாகிகள் வாழ்த்து!
தேனி மாவட்டம் பூதிப்புரம் பேரூராட்சியின் துணைச்சேர்மன் திரு. பொன்னையன் அவர்களின் இல்லத்திற்கு, தமிழக முன்னாள் முதல்வரும், போடி சட்டமன்ற உறுப்பினருமான மாண்புமிகு திரு. ஓபிஎஸ் ஐயா அவர்கள் நேரில் வருகை தந்தார். துணைச்சேர்மன் இல்ல நிகழ்வில் பங்கேற்ற அவருக்கு துணை சேர்மன் பென்னையன், அப்பகுதி பொதுமக்கள் சார்பாகவும் சிறப்பான வரவேற்பு மற்றும் மரியாதைகள் அளிக்கப்பட்டன.
இந்நிகழ்வில் அரசியல் எல்லைகளைக் கடந்து பல்வேறு முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்டனர். குறிப்பாக:
பூதிப்புரம் பேரூராட்சி சேர்மன் திரு. கவியரசு
திமுக ஒன்றிய செயலாளர் திரு. ஐயப்பன்
திமுக நிர்வாகிகள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள்
சமூக ஆர்வலர்கள் மற்றும் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் பல்வேறு துறை சார்ந்த அரசு அலுவலர்கள்திரளாக பங்கேற்றனர் பங்கேற்று, துணைச்சேர்மன் திரு. பொன்னையன் அவர்களின் குடும்பத்தினருக்கு தங்களது மனமார்ந்த வாழ்த்துகளையும் மரியாதையையும் தெரிவித்துக் கொண்டனர். அனைத்துத் தரப்பு தலைவர்களும், அரசு அதிகாரிகளும் ஒருசேரப் பங்கேற்ற இந்நிகழ்வு பூதிப்புரம் மற்றும் தேனி வட்டாரப் பகுதியில் பெரும் நெகிழ்ச்சியையும் அரசியல் முக்கியத்துவத்தையும் பெற்றுள்ளது

