Type Here to Get Search Results !

ஆண்டிபட்டி வீர ஆஞ்சநேயர் திருக்கோவிலில் புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையினை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

theni today News 0
ஆண்டிபட்டி வீர ஆஞ்சநேயர் திருக்கோவிலில் புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையினை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு


தேனி மாவட்டம் ஆண்டிபட்டி மேற்கு ஓடை தெருவில் மிகவும் பழமை வாய்ந்த வீர ஆஞ்சநேயர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த திருக்கோவிலில் புரட்டாசி மாதத்தின் சனிக்கிழமையில் வீரா ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வருகிறது.

வேலைவாய்ப்பு மற்றும் பல்வேறு அறிய தகவல்கள் தெரிந்திட whatsapp குழுவில் இணைவோம்






தேனி மாவட்டம் வாட்சாப் குழுவில் இணைய



https://chat.whatsapp.com/LXBEEZWpSrdJ0BBenX2BOt   

இதே போல் புரட்டாசி மாதத்தின் மூன்றாவது சனிக்கிழமையினை முன்னிட்டு வீர ஆஞ்சநேயருக்கு சந்தன காப்புடன் ராஜா அலங்காரத்துடன் சிறப்பு பூஜைகளும் சிறப்பு ஆராதனைகளும் நடைபெற்றன .மேலும் வீர ஆஞ்சநேயருக்கு துளசி மாலை வடை மாலை அணிவிக்கப்பட்டது. 





மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு நடைபெற்ற இந்த சிறப்பு பூஜையில் பங்கேற்ற அனைத்து பக்தர்களுக்கும் துளசி செந்தூரம் வழங்கிய பின் சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது.இந்த சிறப்பு பூஜையில் ஆண்டிபட்டி பாப்பம்மாள்புரம் கொண்டமாநாயக்கன்பட்டி, வைகை ஸ்ரீரங்கபுரம் சுப்புலாபுரம் , ரங்கநாதபுரம் ஜக்கம்பட்டி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்

தேனி மாவட்டத்தின் திறவு கோல்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.