Type Here to Get Search Results !

பார்வைக்குறைபாடு மற்றும் செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகள் ஸ்மார்ட்போன் பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்

பார்வைக்குறைபாடு மற்றும் செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகள் ஸ்மார்ட்போன் பெறுவதற்கு   விண்ணப்பிக்கலாம் என  மாவட்ட ஆட்சித்தலைவர்  தகவல் 


தேனி மாவட்டம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 18 வயது முதல் 70 வயது வரையுள்ள பார்வையற்றோர்/பார்வைக்குறைபாடுடையோர் மற்றும் செவித்திறன் குறைபாடுடையோர்/காதுகேளாத மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு ஸ்மார்ட் போன் வழங்கப்பட்டு வருகிறது.



இத்திட்டத்தில் பயன்பெற பார்வையற்றோர்/பார்வைக்குறைபாடுடையோர்/ செவித்திறன் குறைபாடுடையோர்/காதுகேளாத மாற்றுத்திறனாளிகள் தங்களது மாற்றுத்திறனாளி அடையாள அட்டை நகல்,  UDID அட்டை நகல்,  ஆதார் நகல்,  குடும்ப அட்டை நகல்,  புகைப்படம் -2  மற்றும்  கல்லூரியில் பயிலும் சான்று / சுயதொழில் புரியும் சான்று / நிறுவனத்தில் பணிபுரியும் சான்று ஆகியவற்றுடன் 06.03.2024 - க்குள் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்திற்கு                    (மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் பின்புறம்) நேரில் சென்று விண்ணப்பிக்கலாம்.


 மேலும், இதுதொடர்பான விபரங்களுக்கு 04546-252085 என்ற தொலைப்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர்  ஆர்.வி.ஷஜீவனா  தெரிவித்துள்ளார்கள்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Top Post Ad

விளம்பரப் படம் - KST Store